புதன், 8 பிப்ரவரி, 2012

ஊக்கமும் ..ஆக்கமும் .


ஊக்கமும் ..ஆக்கமும்.

அலை கடல் தாண்டி ,
அரக்கனிடம் சிறை பட்ட 
அஞ்சுகம் சீதை மீட்க 
அனுமனின் ஆற்றல் உணர்த்தி 
அளவிலா உதவி செய்தான்.

கரடி முகம் கொண்டான்.
கனத்த மதி கொண்டான்.  
வாமணனை எழு முறை 
வலம் வந்த ஜாம்பவான்.


















பிராட்டி சீதையவள் 
பிஞ்சுப் பிராயத்தில் ,வில் 
பேழைதனை நகர்த்தி ,பின் 
பெரும் போட்டிக்கு வித்திட்டாள்.      

வில்லொடித்து,வீரம் காட்டி 
விவாகத்தில் முடிந்த கதை .
மிதிலையில் மன்னன் சனகன் 
மகளின் மணம் முடிக்க 
உதவியதொரு சிவ தனுசு.

பாரதத்தில் பீமனுக்கு, 
பார் புகழ்ந்த வீரனுக்கு, 
கீசகனை வதம் பண்ண 
கிருஷ்ணன் சூசகமாய் 
தந்திரமாய் உதவியதொரு 
தலைப்பு மாற்றிய தர்ப்பைப் புல்.

தம் ஆற்றல், தாம் உணரா
தரணியில் மாந்தர் பலர் .

தர்ப்பையாய்!.
தனுசாய்!.
மந்திரியாய்!. 
மாயக் கண்ணனாய்!.
எப்படியோ?. 
எழுப்பிடுவீர். 
உறங்குகின்ற 
உள்ளம் தனை.
விதையும்.... 
விருட்சமாகும்.. . 
      
நன்றி :கூகுள் படங்கள் .  

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை.

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை. 




















காலைக் கதிரவன்,
கிழக்கில் உதித்ததை,    
கட்டியம் கூறிடும்,
கீற்றுக் கிரணங்கள் .
விழித்திரை     பிரித்து 
விடிந்தது பொழுதென்று 
கிடந்தவனின், முதல் நடை .