ஞாயிறு, 20 மே, 2012

மேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).

முதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி .
ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை எல்லா விதத்திலும் தொட்ட நானும் ஒட்டியவராய், என் துணைவியும் .வரும் மே 17ம் தேதி, நாற்பது ஆண்டை நிறைவு செய்த மண வாழ்க்கை.
மே 15 ஆம் தேதி இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 0630 மணிக்கு தொழில் நகரம் கோயம்புத்தூரை வந்து அடைந்தோம் .சூப்பராய் ஒரு டீ குடித்துவிட்டு 'காரமடை' வழியாய் செல்லும் பேருந்தில் ஏறி, ஒரு மணி நேரத்தில் உருளைக்கிழங்குக்கு பெயர் பெற்ற மேட்டுப்பாளையம் வந்து இறங்கினோம் .தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் ,மேலூர் புல்வெளிகளின் சிகப்புக் கார் எங்களை கடத்திச் சென்றது .இது ஒரு ஓய்வுற்றோர்க்கான இல்லங்கள் அமைக்கப் பெற்ற இடம் .குமரன் குன்று எனப்படும் கிராமத்தில் ,மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது. ஊரில் இருந்து ஒதுங்கி ,சற்றே உள்ளடங்கி ,ஆரவாரமின்றி அமைதி காத்திடும் ,இடமாக .
நாற்பது வருடம் கழித்த நன்னாளை ,இங்கே கழிக்கும் உத்தேசம் .



சனி, 12 மே, 2012

சிந்தனையை கிளரும் சினிமாக்கள் - அங்கும்...இங்கும்.


வழக்காடு மன்றங்கள் ..வழக்கும் ..தீர்ப்பும்.
சுப்ரமணிய புரம், கோரிப் பாளையம் அங்காடித்தெரு வழியாய் வெய்யிலில்   நடந்து சென்ற பொழுது வழக்கு எண் :18 / 9 பட விளம்பர சுவரொட்டி  பார்த்தேன்.
எளிமை யாய், எல்லோர் கவனமும் சிந்தாமல், சிதறாமல் கவரக் கூடிய வகையில், சமூக அவலங்களை தோல்  உரித்து காட்டுகின்றன. வித்தியாச மான, இந்தப் படங்கள்...இவை எழுப்பும் கேள்விகள்..திராணியற்ற நம் நெஞ்சிற்கு, தருகின்ற சவுக்கு அடிகள். பார்த்து, பதை பதைத்து, பின் "இதுவும் கடந்து போகும்",  என்கிற பாமரனாய் நாம்.
திக்கெட்டும்  திரும்பிப் பார்க்க, பேச, வைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரையுலகம்.  ' திடுக் ', என்று திகைத்து எழுந்து நிற்க வைக்கிறது.


அங்காடித் தெருக்கள் இல்லாத உலகமே இல்லை எனத் தோன்றுகிறது. இனம் நிறம், மொழி, தூரம்,பரிணாமங்களின்  வேறுபாடு.அவ்வளவு தான். ஏழ்மை, எதிர்த்து  நிற்க இயலாமை, சாண் வயிற்றுக்கு ஊண் இட, விரும்பியோ விரும்பாமலோ பொந்துக்குள் புதைகின்ற மனிதர்கள், சமாதியாகின்ற வாழ்க்கைகள். அவ்வளவு தான். நிரம்புகின்றன, கொத்தடிமைக் கூடாரங்கள்.
கூடா நட்பு, நம்பிக்கையற்ற பெற்றோர், அதிகார ஆணவங்கள் அவற்றின் துஷ் பிரயோகங்கள், மனிதத்தை நேயமின்றி கசக்கிப் பிழியும் சுயநலமிகள்..
இப்படி பல சமூக அவலங்களை சத்தமின்றி படமெடுத்து, சாட்டையால் சாடுகின்றனர். துண்டாடும் அரிவாளும், தூள் பறக்கும் அடி தடிகளும் தலை காட்டுதல், இன்னமும்  தப்பவில்லை. ஆயினும், புதிய வரவேற்கத்  தக்க மாற்றம் .

வெள்ளி, 11 மே, 2012

மின்சாரம் கண்ணா! ...1

மின் தீர்வையும் .. சில தீர்வுகளும் ..
அலைக்கழிக்கும் மின்வெட்டு, அதிகமான தீர்வை ( மின் கட்டணம் ).ஆட்டிப் படைக்கிறது அடிக்கும் வெயிலும், அடி வயிற்றை கலக்கும் கட்டண உயர்வுகளும்.
மின்வெட்டு தீரலாம். அரசாங்கஅஸ்திவாரம் ஆடாமல் இருக்க இது அவசியம். ஆட்சியாளர்களின் அதிக கவனம் தற்பொழுது,மின்வெட்டை எப்படி தவிர்ப்பது என்பதில் தான்.
ஓரளவு நாமே சமாளிக்கலாம். ஜெனேரட்ட்டர், இன்வர்டர்,சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் சாதனம்,ஆகியவற்றின் மூலம், வசதி இருந்தால்.
ஏற்றப்பட்ட மின் கட்டணம் குறைய வாய்ப்பே இல்லை. கொஞ்சம், தொலை நோக்கோடு, யுக்தி சிலதை கடைப்  பிடித்தால் முக்தி அடையலாம்.

Incandescent Light Bulb 
தாமஸ் ஆல்வா எடிசன் December 1879 
மின்விளக்கு கண்டு பிடித்த பெருமகன்  















புதன், 9 மே, 2012

ராக் கூத்து ...(Midnight Masala )

ராக் கூத்து ( Midnight  Masala )

நடுநிசி தாண்டிவிட்டது. சாமக் கோழி கூவிச்சான்னும் தெரியலை. உறக்க மின்றி உருள்கிறேன். மின்வெட்டில் தொற்றிய வியாதி. நித்திரா தேவி சொல்லாமா, கொள்ளாம அப்போ, விடுபபில் போனவுங்க தான்...என்ன பண்றது?. வழக்கம் போல, மடிக் கணினியை எடுத்து முக நூலை (Face Book) முப்பதாவது முறையாய், முறைக்கிறேன்.


பல்கலைக் கழக பையன்களின் தகவல் பரிமாற்றத்திற்காக, எலியட் சுகேர் பெர்க் ( Elliot Zuckerberg ) என்பவர்  கண்டுபுடிச்சது, முகநூல்.  பிச்சு கிட்டு போவுது,  இப்பொ.  நூறு பில்லியன் டாலர் மதிப்பை தொட்டுவிடும், அளவிற்க்கு.  இதில் அவருக்கு சொந்தமான பங்குகளே இருபத்தைந்து  பில்லியன் டாலரை தொடும், அப்படின்னு செய்திகள்.

வியாழன், 3 மே, 2012

வெம்மையில் இருந்து விடுதலை .2

வெம்மையில்  இருந்து விடுதலை.தொடரச்சி ....

பகல் முழுதும் கடும் வெய்யிலில் காய்ந்த மொட்டை மாடி, சூரிய ஒளியில் இருந்து வாங்கிய வெப்பம் கான்க்ரீட் மேல் தளம் மூலம் மெள்ள  கசிகிறது. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியில் இருந்து சூடான காற்று. என்ன பண்ணலாம்?.எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது ?. சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா ?. என பல யோசனைகள். கொஞ்சம் மேலே அன்பு கூர்ந்து படிங்க ...

சாதாரணமாக, மனிதர்களின்  உடல் வெப்பம் 98 .6°F ( 37°C ). உடலை உரிக்கும் சஹாரா, கோபி பாலை வனத்தில் இருந்து, உறைபனி இருக்கும் துருவம் வரை, இப்போ மனுஷன் வசிக்காத இடம் கிடையாது. அப்போ!. ஒரு மனிதனுக்கு சௌகரியமா, தாங்கிக் கொள்ளக் கூடிய சீதோஷணம் எவ்வளவு என்று, தெரிந்து கொள்ளணும்னு ஆசை.

இது குறித்து நிறையவே ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. வயசு, உடல் பருமன், பாலினம், ஆரோக்கியம், அணிகின்ற ஆடைகளின் தன்மை, மன நிலை, உணவு ..என்று பல விஷயங்களைச் சார்ந்ததாம். மேலும், சீதோஷ்ண நிலைகளான வெப்பம், குளிர், காற்று, ஈரப் பதம், நீர் ஆவி யாகும் தன்மை, இவற்றையும் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுமாம். ஆக மொத்தம், சித்திர குப்தன் கூட, துல்லியமாக கணிக்க முடியாத, கணக்குங்க..

புதன், 2 மே, 2012

தஞ்சை பெரிய கோவில்

 தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிர்மோத்சவ சின்ன மேளம் விழா   

தஞ்சை பெரிய கோவில், மன்னன் ராஜராஜன் உலகிற்கு அருளிய உன்னத வடிவமைப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழரின் கலாச்சாரத்திற்கும்கட்டிடக்  கலைநுட்பத் திறமைக்கும் எடுத்துக்காட்டாய்    புவியெங்கும் புகழ் பரப்பும் கோவில். 
ஸ்ரீ பிரகதீஸ்வரரும், ஸ்ரீ பெரியநாயகியும் உற்சவ கோலத்தில். சின்ன மேளம் விழாவில் சில காட்சிகள். .. ( நிகழ்ச்சி 30௦.4.2012 இரவு ஏழு மணி. 




சனி, 28 ஏப்ரல், 2012

நம்பிக்கை நட்சத்திரங்கள் .2


தலை நிமிர வைக்கும் தமிழர். 






கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

வெம்மையில் இருந்து விடுதலை .1

வெம்மையில் இருந்து விடுதலை.

அப்பப்பா!முடியலையடா, சாமி!. உஸ் அப்பாடா! "போன வருடமே தேவலை", என்ற வழக்கமான, உச்சி நேர புலம்பல்கள். கோடை காலம். வெள்ளிக் கிரணங்களின் கண் கூச வைக்கும் வீச்சம்.வெப்பமானியில், சிகரம் முட்டி நிற்கும் அளவைக் கோடுகள்.மிகையான வெக்கையும், தீராத  புழுக்கமும் மின்வெட்டின் உபயம். அறிவித்த மின்வெட்டைத் தவிர ,மற்ற நேரங்களில் மின்னல் போல்,அவ்வப் பொழுது  வந்து போகிறது, மின்சாரம். கொஞ்சம் பொறுங்கள் !.  ஒளிமயமான எதிர்காலம், தடை யில்லா மின்சாரம் என்று நம்பிக்கை தருகிறது, அரசு. சற்றே ஆறுதலான விஷயம். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை .
சுட்டெரித்த வெயிலில், எங்கள் வீட்டு  மொட்டை மாடி, மணல் இல்லா பாலை வனமாய், கனல் கக்குகிறது. தலைக்கு மேல் சுழலும் மின் விசிறி, அனல் காற்றை அள்ளி வீச, அணிந்து இருக்கும் ஆடைக்குள் தீயின் வாசம். இந்த வெப்பத்தின் வீச்சத்தில் இருந்து தப்ப வழி என்ன ?.என்ற மாறாத கேள்வி களில்..மண்டைக் குடைச்சல்.விடை தேடி ..

புதன், 8 பிப்ரவரி, 2012

ஊக்கமும் ..ஆக்கமும் .


ஊக்கமும் ..ஆக்கமும்.

அலை கடல் தாண்டி ,
அரக்கனிடம் சிறை பட்ட 
அஞ்சுகம் சீதை மீட்க 
அனுமனின் ஆற்றல் உணர்த்தி 
அளவிலா உதவி செய்தான்.

கரடி முகம் கொண்டான்.
கனத்த மதி கொண்டான்.  
வாமணனை எழு முறை 
வலம் வந்த ஜாம்பவான்.


















பிராட்டி சீதையவள் 
பிஞ்சுப் பிராயத்தில் ,வில் 
பேழைதனை நகர்த்தி ,பின் 
பெரும் போட்டிக்கு வித்திட்டாள்.      

வில்லொடித்து,வீரம் காட்டி 
விவாகத்தில் முடிந்த கதை .
மிதிலையில் மன்னன் சனகன் 
மகளின் மணம் முடிக்க 
உதவியதொரு சிவ தனுசு.

பாரதத்தில் பீமனுக்கு, 
பார் புகழ்ந்த வீரனுக்கு, 
கீசகனை வதம் பண்ண 
கிருஷ்ணன் சூசகமாய் 
தந்திரமாய் உதவியதொரு 
தலைப்பு மாற்றிய தர்ப்பைப் புல்.

தம் ஆற்றல், தாம் உணரா
தரணியில் மாந்தர் பலர் .

தர்ப்பையாய்!.
தனுசாய்!.
மந்திரியாய்!. 
மாயக் கண்ணனாய்!.
எப்படியோ?. 
எழுப்பிடுவீர். 
உறங்குகின்ற 
உள்ளம் தனை.
விதையும்.... 
விருட்சமாகும்.. . 
      
நன்றி :கூகுள் படங்கள் .  

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை.

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை. 




















காலைக் கதிரவன்,
கிழக்கில் உதித்ததை,    
கட்டியம் கூறிடும்,
கீற்றுக் கிரணங்கள் .
விழித்திரை     பிரித்து 
விடிந்தது பொழுதென்று 
கிடந்தவனின், முதல் நடை .