காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2011

காதல் மனம்...

காதல் மனம்













 
உள் வாங்கும் மூச்சில் என்
உயிர் விரியும்.
உன் உள்நோக்கிப் பார்க்க
என் மனம் விழையும் .

கண்கள் ஊடுருவும், உன் 
கடல் ஆழத் தேடலில், 
இதயம் திறந்து, 
இன்னும் ஆழமாய்

முத்துக் குளிக்கும்.எனக்கு 
பித்துப் பிடிக்கும் ....காதலால்! 

     
   

திங்கள், 22 நவம்பர், 2010

காதல்... மணம்

காதல்... மணம்.

காலம் கனிந்து
கனிந்த மனம்
கரையும். கரைந்த
மனம் முகிழ்ந்து
முகிழ்ந்த மனம்.
மலரும். மலர்ந்த மனம்
மணக்கும்.மணம் புரிந்து
மகிழும்.மனம் புரிந்த
மனைவியுடன்  இனி
மணவாழ்க்கை இனிக்கும் . 

         

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .3.

காலையில் பிடித்தது நாட்காட்டி தான்,
காத்திருக்கும்  நாள் குறைந்ததே.
மாலையில் பிடிக்காததும் அதுதான்.
மாறாமல் இருக்கிறதே.

தன்னையறியாமல் கதவிற்கிழுக்கும்,
தபால்காரரின் மணியோசை.
மாதம் முழுதும் தவமிருந்து,
மணியாய் வரும், ஒருநாள் மடல்.

பிரிக்கும் போது,பரிதவிக்கும்.
மனம் பரபரக்கும்.
கையெழுத்து காணும் போது,
குபுக்கென்று, கண்ணீர்  கொப்பளிக்கும் ...
கை பிடித்ததும், நகம் கடித்ததும்,
கால் நெட்டிஎடுத்ததும்,
தலை துவட்டியதும் ,
எல்லாம் சேர்ந்து, முட்டி மோதும்.

இன்று கோவிலுண்டு ,
காலற நடையுண்டு.என்னவனோடு
தொலை பேசியில் பேச,
திரும்ப திரும்ப ஒத்திகையுண்டு.

மணியடித்ததும் ,மெல்லிதாய் ,
கடிதம் கிடைத்ததா? என்றவுடன் .
சொல்ல வந்தது சொல்லாமலே,
மௌனம் மட்டும் காதல் பேசும் ....