பதறாமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதறாமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2010

எல்லை இல்லை ..நீ நினைத்தால்

எல்லை இல்லை.....நீ நினைத்தால்.




தோற்றால் துவளாதே !
துணிவில் தொய்யாதே !
விழுந்தால் எழுந்திரு,
விழிப்புடன் கவனி.    
வையகம் புலப்படும்.
வானம் உன் வசப்படும்.

கூழாங்கல் காக்கைப் பாடம்.
உழைப்பைக் கூறும் தேனீ, எறும்பு .
படிப் படியாய், உன் அடியை 
பதறாமல் எடுத்து வை.
திண்ணமாய்,
திடமாய். 

ஏறிடுவாய் ஏணியை ,
ஏன் இன்னும் தாமதம்?.
என்ன இல்லை... நம் தாயகத்தில் ?.
எல்லை இல்லை........நீ நினைத்தால் .....