பாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2010

சூத்திரமும் சரித்திரமும்..

சூத்திரமும் சரித்திரமும்

சகடத்தி னிரு
சக்கரம் போல்
பூஜ்யமும் ஒன்றும்
புரிந்தியங்கும் கணினி.

பூஜ்யத்தின் உபயம்,
புவிக்களித்த பாரதம்,
பூஜ்யமாயிராமல்,முதலாய்
இன்று கணினியில்,தரணியில்.

கணினியும், காமமும்
மென்பொருள் இயக்கம் .
இரண்டின் சூத்திரம்
இந்திய சரித்திரம்.

முன்னதும் பின்னதும்
நாம் முன்னோடி .
பல்கிடும் மாந்தரும்
நல்கிடும் திரவியம்
நவின்றிடும் சாட்சி

இன்றைய தலைமுறை
கண் இனி, கணினி.
கணிப்பொறி ஆற்றல்
கடல் பல கடக்கவும்,
காசு குவிக்கவும்,
கண்டெடுத்த
கடவுச் சீட்டு.

ஏழையின் சிரிப்பில்,
இறைவனைக் காண,
இந்தியர் நமக்கு.
இன்னுமோர் வாய்ப்பு.
இனிய நல் வாய்ப்பு.