வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உயரப் பறந்த பறவைகள் ...

                                 உயரப் பறந்த பறவைகள் ... 

கணிணிப் புரட்சியால், இந்தியாவின்  இன்றைய இளைய சமூகம் உலகெங்கும் பணி புரியும் வாய்ப்புக்கள். பொருளாதார சுமையால் முதுகு ஒடிந்து, மூச்சுத் திணறிய குடும்பங்கள் வளமான வாழ்க்கையும், வாங்கும் தன்மையும் கூடி, சற்றே இளைப்பாறுகின்றன. இளைஞர் திறமையும், கல்வியும் தந்த வரம்.



 நாம் கனவில் மட்டுமே கண்ட தேசங்களிலும் , திரைப்பட காட்சிகளில் பார்த்து வியந்த நாடுகளுக்கும் , நம் குழந்தைகள் குடி பெயர்தல், சர்வ சாதாரணமாகி விட்டது . புது வீடு, வாகன வசதி என பெரும்பாலான பெற்றோரின் கனவை நனவாக்கி உள்ளனர்,

 கண்களாய் போற்றி வளர்த்த குழந்தைகள், கண்காணா இடத்தில, தொலை தூர தேசங்களில்....தூரமும், பிரிவும்.  அது தரும் பெரும் துயர்...இதயத்தில்.