வியாழன், 30 செப்டம்பர், 2010

வீடு நோக்கி ஓடுகின்ற ......

வீடு நோக்கி ஓடுகின்ற ......
முதல் முதலில் வெள்ளை அங்கியிலே, முல்லை பல் வரிசையோடு,
முறுவல் கூட்டி, முக மலர்ச்சி காட்டினீர். மறக்க இயலா தொடக்கம். 
சென்மத் தொடர்பாய்,  அடுத்து அளவளாவிய நாட்கள். அறிவார்ந்த நட்பு.
அன்பரே! ஆகஸ்டில் விடுதலை! அறிந்தேன்.  அளவிலா மகிழ்ச்சி. 
                  
வணக்கத்துடன் வாழ்த்துகிறேன். சவுதியின் வடக்கு கோடியில் இருந்து.
வாழ்க்கையில், மீண்டும் வண்ண மயமான, நாட்களுக்கான கட்டியம்.
அந்தி நேரப் பறவையாய், சிங்காரமாய் சிறகடித்து, கூடு நோக்கி,
அன்பானவரின்  அரவணைப்பு. அதற்கான ஆலத்தி,   இனி,
விவேகமாய் காலம் கழித்து, வெற்றியுடன் வீடு நோக்கி,
வேகமாய் நாட்கள், இனி பட்டம் போல், பறந்து போகும்.
                      ( ஊர் திரும்பும் நினைவில் ..) 
    
இதய வீணைக்குள்,  இங்கிதமாய்,  இன்னிசை நாதம் தோன்றும் .
இழையோடும் மூச்சில்  இன்பத் தென்றல் உலா வரும்.
நாடி நரம்பெல்லாம், நாதசுரம் இசைக்க,
பாலை வெயில் கூட, பனி மழையாய் தோன்றும் .
புயலான உள்ளமும் ,இனி பூவாய் மாறிடும் .
கார்மேகம் கண்டு தோகை விரித்த, மயிலாய் மனம்.
கந்தா!  கடம்பா !  கார்த்திகேயா!  முருகா!  மால் மருகா ! 
இமை மூடா இரவுகள்,  இனி இல்லை அய்யா!
இனி ஆர்ப்பரித்த, அகக்கடலும் அமைதி காணும் .     
           
                  
( அருமை நண்பர்    டாக்டர். கார்த்திகேயன் அவர்கள், ஒப்பந்தம் முடிந்து,  நாடு திரும்பும் போது, அவருக்கு, அடியேன் எழுதிய மடல்)         
                  

Down the memory lane....

 Down the memory lane....
 
 Its time, now, to reflect and recollect,
Those days, I passed, as an innocent young,
When simple things, spread shine and smile,
Then, even serious things, never did matter.
The lillies, lotuses and the many fishes beneath,
The ripples made, when I  swam, in the pond,
The tamarind trees  that lined the roads,
The paddy field, ripe in their golden glory,
The nightly sky, where the stars twinkled,
The darkness that brought fear and chill,
The rains that brought showers and shivers,
The frogs chorus, beetles hum and the eerie silence,
The thunder storms that made me tremble,
The love and care, sheltered ,in my mother's lap,
The twilight in which sparrows sang,
The sun that glittered on the morning dew,
The fresh breeze , the gentle sway of leaves,
The tales, that made me cry, sing, scream and sob,
The wonder years of one's childhood.
Ahh..it's time to remember and to cherish....

புதன், 29 செப்டம்பர், 2010

மலராத மொக்குகள் ....

மலராத மொக்குகள் ....
பல சமயம் பயணங்களின் போதும்,
பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பின் போதும்,
தனியனாய் மோனத் தவத்திலிருக்கும் போதும்,
தடம் புரண்ட ரயிலாய், தாறு மாறாய்,  
எண்ணற்ற எண்ண அலைகள் என்னை ஆட்டுவிக்கும்.
கணக்கற்ற கற்பனை ஊற்றுக்கள் கண்களை திறக்கும்.
கருவிலே உருவாகி பின் கலைந்து போகும் என் சிசுக்கள்.
முழுமையே அடையாத என் சிப்பியின் முத்துக்கள்.
கணத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழிகள்.
ஓட்டை உடைத்து வரப் பயந்த என் பிஞ்சுக் குஞ்சுகள்,
புதை மணலில் சிக்கி மறையும் என் புதிய பிறவிகள். 
ஊட்டி வளர்த்து, பின், உலவ விடப்படாத என் உயிரோட்டங்கள்.
 
இலக்கும், இலக்கணமும் இல்லாத, என் இதயத் துடிப்புகள்.  

திங்கள், 27 செப்டம்பர், 2010

வறுமையின் நிறம்..

வறுமையின் நிறம்..
நித்தம் பருப்பும் பாயசமும் இல்லாத உணவு,
கோடையை தணிவிக்க இல்லை, குளிர் சாதனம்.
சொகுசாய் பயணம் செய்ய, கார் கூட இல்லா கஷ்டம்,
பகட்டாய் உடுத்தவும், பவனி வரவும் வசதி இல்லை. 
கொடிதினும் கொடிது என் வறுமை.
பரந்த கனவுகளில் விரிந்த என்  எல்லைக்  கோடுகள்.
நனவாக்க நான்,  பணம் நாடி ,பிரவேசம் பரதேசம்.
பாலைவனம், பரந்த மணல்வெளி, கானல் நீர்,
காதலி போல் கன்னத்தை முத்தமிடும் அனல் காற்று.
மூச்சை முட்டச் செய்யும் புழுதிப் புயல்,
அரேபியாவில் ஆயிரத்தொரு இரவுகள்,
கழிந்தால், கனவுகள்  நனவாகலாம்.        

மீண்டும் ஏன் இந்த பாலைவனம்....


சோலையில்லா பாலைவனம். சுட்டு எரிக்கிற வெயில்.
பொந்துக் கூட்டுக்குள் எட்டடுக்கு சீட்டுக் கட்டு வீடு.
பதர்களால் வஞ்சிக்கப் பட்டு பாதி ஊதியம், இன்று.
மீதி நேரத்தில்,கார் கழுவி மீத்த பணம்.
பார்த்து பார்த்து செலவழித்து, பின்  சேர்த்த பணம். 
பக்குவமாய் சேமித்தால்......
மீண்டும் ஏன் இந்த பாலைவனம்...
( வளைகுடா நாட்டில் பணி புரிந்த   என் சக தோழனின்  அங்கலாய்ப்பு )     

புதன், 15 செப்டம்பர், 2010

சிறிதே சிந்திக்கவும் ..முடிந்தால் சிரிக்கவும் .. ..

 சிறிதே சிந்திக்கவும் ..முடிந்தால்  சிரிக்கவும் ..
இரவிலே உறங்கும் போது ஒரு கனவு... ..வெளி நாட்டு
உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்யலாம் என்று.
மன்னிக்கவும். ஆங்கிலத்தில்    பிதற்றுவதற்கு ......
ஹி..ஹி .வெளிநாட்டுக் கனவல்லவா !
  • Sam bar....Indians drink..
  • No idle talk..........we make idlis.
  • Douse your hunger...Dosas are here.
  • Naan..sense,smell and swallow.
  • Onions and Unions.... ..make us cry.
  • Chic(ken)  legs.........We serve right size.
  • Together we gather.....Good will and a few bucks more.
  • The spices here are the happiest lot......They get mixed up.
  • We provide lunch at your Desktop...you may get Laptop at home.
  • For a little price..............we serve you future chickens.
  • Out of ink.............Today no signature dishes. 

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கூரை ஏறி கூவும் கோழி ...

கூரை ஏறி கூவும் கோழி ...
                                                             
நம்மில் பலருக்கு திறமை இருந்தும், உரிய முறையில் சரியான
விதத்தில், நம் திறமைகளை  வெளிப் படுத்தாததால், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல அரிய வாய்ப்புக்களை இழக்கிறோம்.
                                                                            
காட் என்ற  ஒரு வகை மீன் (Cod Fish) நடுக்கடலில். ஒவ்வொரு முறையும் சுமார் ஐந்து மில்லியன் முட்டைகளை இடுகிறது. இது உலகில் பலருக்கும்  தெரியாத உண்மை.
                                                                                                                                                                        
ஆனால், நம்ம  வீட்டுப் பெட்டைக் கோழியோ மதியம்  முட்டை போட, காலையிலேயே  கூரை   ஏறி,    "கொக்கரக்கோ ",     "கொக்கரக்கோ ", 
'முட்டை இடப் போறேன்' ,  'முட்டை இடப்  போறேன்'  என  கூவுகிறது.

நண்பர்களே ! ஆற்றல்களை (Skill sets) வளர்த்து கொள்ளுங்கள். அதை உலகிற்கும் அறியப்படுத்துங்கள்.


.    Toot your horns and it pays you to advertise...


                                                                                                     

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஹைக்கூ பிதற்றல்கள் ...

அவசரமான சிங்கபுராவில்,

குருவி கூட, "குவிக்", "குவிக்",

என கத்துகிறது.




பொய். எனக்கு பிடிக்கும்.

பொய்யில்லை நிசம்.

பாலச்சந்தர் படத்தை சொல்லுகிறேன்.

வாழ்க்கை...வாழ்கையில்

வாழ்க்கை


வாழ்க்கையில் முன்னேற,

நீர் தேடும் வேர் போல, அறிவையும்

வெளிச்சம் நாடும், இலை போல

வாய்ப்புகளையும் தேடி

முயலாமை, முடியாமை எனும்,

ஆமைகள் அகற்றின்,

ஆகாததும் உண்டோ!

இப்புவிதனிலே.



வாழ்கையில்

வாழை மரமாய்...

வளர்கையில்

ஆல மரமாய் ..

வழுக்கையில்

தனி மரமாய்..

ஆகிப் போகிறான்

மனிதன்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

தாயின் தனிமை ..

சொச்சம் இருக்கும் கண்களில்,

மிச்சம் இருக்கும் உயிர், ஊசலாட,

கணக்கற்ற ரேகைகள், காலக் கோடுகளாய்,

கன்னத்தில் படர்ந்தவள். நிலை இல்லா தலை,

கழுத்தின் மேல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய்.


ஊழ்வினையாளோ, உண்ண உணவின்றியோ,

உயரம் சுருங்கிப் போனவள்.

குள்ளமான இந்தத் தாய், இன்று,

குப்பை பொறுக்கி பிழைக்கிறாள்.


அனாதையா?. ஆக்கப்பட்டவளா?.

தெரியவில்லை .என் நெஞ்சு தகிக்கிறது .

அனாதையாயின்,அவள் தன்மானத்திற்கு,

என் தலை வணக்கம்.

ஆக்கப்பட்டிருந்தால். என் சமுதாயத்தின்

அவலம். சிதைவு. சீரழிவு.


ஈன்ற பொழுதின் பெரிதுவந்திருப்பாள். இத் தாய்.

எந்தத் தாயுமே. அதுவே தாய்மை. அதன் தனித் தன்மை.

இத் தாய். தவிர்க்கப்பட்டு, தனிமை படுத்தப் பட்டாளோ?.

இன்னும், எதற்காக?. ஏன்?. யாருக்காக.

இந்த உயிரை தாங்கி யாசகம் ....


காமாலைக் கண் காலனுக்கு, கடின மனம்.

கண் தெரியவில்லை.கஷ்டங்களின் எல்லைகளில் இருந்து,

இவளை மீட்கும், ஈரமோ, இதயமோ அவனுக்கு  இல்லை.

இவளின் நிலை கண்டு அல்லாடுகிறது என் மனம்.

இதயத்தில் வலி. இமையோரம் ஈரம்.

இந்த சீனத்து தாயின் தனிமை துயர் கண்டு.