கொய்தலும்..நெய்தலும்.. இன்றி .
கரிசல் மண் வயலில்
கருவேல மர வரப்பில்
வெற்றுடம்பு விவசாயி
இற்றுப் போன வேட்டியுடன்.
வெள்ளைப் பந்துகளாய்
வெடித்த பருத்திகள்
வீசும் காற்றில்
விதவைக் கோலத்தில்.
தறிக்குப் போகாமல்
தறி கெட்டுப் பறக்கும்.
கொய்யாத பருத்தி,இன்று
கொலைகாரன் ஆயிற்று.

கடன் தந்த நெருக்கலில்
கடன் தந்த நெருக்கலில்
கழுத்திலிட்ட சுருக்கால்.
நன்றி :கூகுள் படங்கள்