ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உயரப் பறந்த பறவைகள் ...

                                 உயரப் பறந்த பறவைகள் ... 

கணிணிப் புரட்சியால், இந்தியாவின்  இன்றைய இளைய சமூகம் உலகெங்கும் பணி புரியும் வாய்ப்புக்கள். பொருளாதார சுமையால் முதுகு ஒடிந்து, மூச்சுத் திணறிய குடும்பங்கள் வளமான வாழ்க்கையும், வாங்கும் தன்மையும் கூடி, சற்றே இளைப்பாறுகின்றன. இளைஞர் திறமையும், கல்வியும் தந்த வரம்.



 நாம் கனவில் மட்டுமே கண்ட தேசங்களிலும் , திரைப்பட காட்சிகளில் பார்த்து வியந்த நாடுகளுக்கும் , நம் குழந்தைகள் குடி பெயர்தல், சர்வ சாதாரணமாகி விட்டது . புது வீடு, வாகன வசதி என பெரும்பாலான பெற்றோரின் கனவை நனவாக்கி உள்ளனர்,

 கண்களாய் போற்றி வளர்த்த குழந்தைகள், கண்காணா இடத்தில, தொலை தூர தேசங்களில்....தூரமும், பிரிவும்.  அது தரும் பெரும் துயர்...இதயத்தில்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8

நாளைய தலைமுறை ....நமது செல்வங்கள்.


வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கவலை அடையத் தொடங்கினர் .பள்ளியை பாதியில் விட்ட முகுந்தனும், முதுகலை பட்டம் பெற்ற வசந்தனுக்குமே தத்தம் சிறார்களை வளர்க்கும் விதம் சரியா ? என்ற ஐயப்பாடு.
வழக்கம் போல் தம் ஐயம் தெளிய, தங்கள் ஆசிரியர் திரு. கல்யாணராமனைத் தேடித் போயினர். கால ஓட்டத்தில் கல்யாணராமன் முதுமையின், மூத்த நிலையில் இருந்தார்.
            பழைய மாணாக்கர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தார்.நெடிது நேரம் அளவளாவிய பின், ஆசிரியர் கல்யாணராமன், "வெகு வேகமாய் வளர்ந்து வரும் நவீன உலகில் பெற்றோர் குழந்தைகளியிடையேயான தலைமுறை இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது..ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட மலர் போல்.. ..இடம்,பொருள், வசதி,கல்விக்கான வாய்ப்பு, வளரும் சமுதாய சூழல், பெற்றோர்களின்  ஈடுபாடு,பள்ளியின்  தரம், ஆசிரியர் என பன்முக பங்களிப்பில்இம்மலர்  பரிணமிக்கிறது.மாதா,பிதா, குரு என்ற தத்துவம், குழந்தை வளர்ப்பின் கால கட்டங்களே.
                  "குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதா? சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதா ?"எனபது தொன்று தொட்டே எழுப்பப்படும் கேள்வி.சரியான முடிவு சொல்ல இயலா  தர்க்கம். பாமரர் படித்தோர் என பெற்றோர் பலதரப்பட்டவர். "எது சரி? ", என எப்படி முடிவு செய்ய இயலும்?.இதற்க்கு சரியான தீர்வு எது?.
 காலம் காலமாய் எல்லோரும் கேட்டு  வரும் இக்  கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ  புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை  களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.
"குழந்தை வளர்ப்பில் நம் தாய் தந்தையே நமக்கு முன்னோடி,மேலும் குழந்தைகள் பெற்றோர்களுடன் தம் எண்ணங்களை சுதந்திரமாய்  பகிர்ந்து கொள்ளும் அளவு தோழமையுடன் வளருங்கள் ",என முடித்தார் ஆசிரியப் பெரு மகன்.
நன்றி : கூகுள் படங்கள்