கத்தரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்தரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மே, 2012

வெம்மையில் இருந்து விடுதலை .2

வெம்மையில்  இருந்து விடுதலை.தொடரச்சி ....

பகல் முழுதும் கடும் வெய்யிலில் காய்ந்த மொட்டை மாடி, சூரிய ஒளியில் இருந்து வாங்கிய வெப்பம் கான்க்ரீட் மேல் தளம் மூலம் மெள்ள  கசிகிறது. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியில் இருந்து சூடான காற்று. என்ன பண்ணலாம்?.எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது ?. சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா ?. என பல யோசனைகள். கொஞ்சம் மேலே அன்பு கூர்ந்து படிங்க ...

சாதாரணமாக, மனிதர்களின்  உடல் வெப்பம் 98 .6°F ( 37°C ). உடலை உரிக்கும் சஹாரா, கோபி பாலை வனத்தில் இருந்து, உறைபனி இருக்கும் துருவம் வரை, இப்போ மனுஷன் வசிக்காத இடம் கிடையாது. அப்போ!. ஒரு மனிதனுக்கு சௌகரியமா, தாங்கிக் கொள்ளக் கூடிய சீதோஷணம் எவ்வளவு என்று, தெரிந்து கொள்ளணும்னு ஆசை.

இது குறித்து நிறையவே ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. வயசு, உடல் பருமன், பாலினம், ஆரோக்கியம், அணிகின்ற ஆடைகளின் தன்மை, மன நிலை, உணவு ..என்று பல விஷயங்களைச் சார்ந்ததாம். மேலும், சீதோஷ்ண நிலைகளான வெப்பம், குளிர், காற்று, ஈரப் பதம், நீர் ஆவி யாகும் தன்மை, இவற்றையும் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுமாம். ஆக மொத்தம், சித்திர குப்தன் கூட, துல்லியமாக கணிக்க முடியாத, கணக்குங்க..