வலைபின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைபின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2010

முதன் முதலாய்.....

முதன் முதலாய்..

                                                                                                                                                     இணைய தளத்தின் வலைபின்னலில்.தன்னிச்சையாய்.... பெருவிளக்கின் வெளிச்சம்   
கவர்ந்த விட்டில் பூச்சியாய்.பணி மூப்பால்,தற்போது பொறுப்பில்லை......மனதில் இருப்பில்லை....என்னவாச்சி, ஏன் இந்த முயற்சி என்ற...மண்டை குடைச்சல்களுக்கும் என்னிடம் விடை இல்லை.

               தளத்தில் பலரின் பதிவுகளையும், பகிர்வுகளையும் பார்த்தபோது.. எண்ணற்ற முத்துக்களும், மணிகளும். சிந்தியும் சிதறாமலும்....அப்பப்பா...அயர்ந்து போனேன்.
புறமுதுகு இடுவது மரபல்ல. இல்லையா....புண் படாமல் பொதுவாய் எழுதலாம் தானே...நான் கவிஞனும் இல்லை...எழுத்தாளனும் இல்லை..ஆயின் நல்ல ரசிகன்.

             வாழ்ந்த பாதையில் பின்னோக்கி பார்க்கையில். மணல் சுவடுகள் போலவும்,
கடல் அலையில் கால் பதித்த தடங்களுமாய், அழிந்து போன பல நினைவுகள்.
கருவாகி, உருவாகி, பின் பிறவாமலே கலைந்து போன சிந்தனைகள். வலிகளின் விளிம்பில் பிரசவித்த வார்த்தைகள், இன்ன பிறவும், இப்போதும் பரணில்.மங்கிப் போன மடல்களாய். பல ஆண்டுகளாய். தூக்கி எறிய மனமில்லாமல் ...
மீண்டும்    தூசு தட்ட போறேன்...

  • பாலைவனம்,
  • ஒற்றை பனைமரம்,
  • இரு  சொட்டு கண்ணீர்.

     என என்னை அவ்வப்போது  வெகுவாய் பாதித்ததும், பரிதவிக்க வைத்ததும்.... நிசங்களும் அவற்றின் நிழல்களும்..... அவ்வப்போது கிறுக்க போகிறேன். பிழைகள் நிச்சயம். பொறுப்பதோ....வறுப்பதோ....உங்கள் கையில்..

அன்புடனே.