வெய்யில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெய்யில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஏப்ரல், 2012

வெம்மையில் இருந்து விடுதலை .1

வெம்மையில் இருந்து விடுதலை.

அப்பப்பா!முடியலையடா, சாமி!. உஸ் அப்பாடா! "போன வருடமே தேவலை", என்ற வழக்கமான, உச்சி நேர புலம்பல்கள். கோடை காலம். வெள்ளிக் கிரணங்களின் கண் கூச வைக்கும் வீச்சம்.வெப்பமானியில், சிகரம் முட்டி நிற்கும் அளவைக் கோடுகள்.மிகையான வெக்கையும், தீராத  புழுக்கமும் மின்வெட்டின் உபயம். அறிவித்த மின்வெட்டைத் தவிர ,மற்ற நேரங்களில் மின்னல் போல்,அவ்வப் பொழுது  வந்து போகிறது, மின்சாரம். கொஞ்சம் பொறுங்கள் !.  ஒளிமயமான எதிர்காலம், தடை யில்லா மின்சாரம் என்று நம்பிக்கை தருகிறது, அரசு. சற்றே ஆறுதலான விஷயம். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை .
சுட்டெரித்த வெயிலில், எங்கள் வீட்டு  மொட்டை மாடி, மணல் இல்லா பாலை வனமாய், கனல் கக்குகிறது. தலைக்கு மேல் சுழலும் மின் விசிறி, அனல் காற்றை அள்ளி வீச, அணிந்து இருக்கும் ஆடைக்குள் தீயின் வாசம். இந்த வெப்பத்தின் வீச்சத்தில் இருந்து தப்ப வழி என்ன ?.என்ற மாறாத கேள்வி களில்..மண்டைக் குடைச்சல்.விடை தேடி ..