புதன், 16 பிப்ரவரி, 2011

கொய்தலும்..நெய்தலும்.. இன்றி .


கொய்தலும்..நெய்தலும்.. இன்றி . 


 











கரிசல் மண் வயலில் 
கருவேல மர வரப்பில் 
வெற்றுடம்பு விவசாயி
இற்றுப் போன வேட்டியுடன்.

வெள்ளைப்  பந்துகளாய்
வெடித்த பருத்திகள்
வீசும் காற்றில் 
விதவைக் கோலத்தில்.

தறிக்குப் போகாமல் 
தறி கெட்டுப் பறக்கும்.

கொய்யாத பருத்தி,இன்று  
கொலைகாரன் ஆயிற்று.



கடன் தந்த நெருக்கலில் 
கழுத்திலிட்ட சுருக்கால்.   


நன்றி :கூகுள் படங்கள்          

12 கருத்துகள்:

  1. கொய்திருந்தால் ஒரு வேளை சாகாமல் இருந்திருக்கலாமோ.There can be lots of ifs and buts.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமா ஒரு நல்ல கவி வரிகளை கொண்ட கவிதை..

    அனால் வலிக்கவும் செய்கிறது ...

    பதிலளிநீக்கு
  3. அரபுத் தமிழர்க்கு நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  4. ""தறிக்குப் போகாமல்
    தறி கெட்டுப் பறக்கும்.

    கொய்யாத பருத்தி,இன்று
    கொலைகாரன் ஆயிற்று.""
    என்ன பாவம் செய்தான் இந்த விவசாயி?
    கவிதை மனதைப் பிழிகிறது சார்.

    பதிலளிநீக்கு
  5. உண்மை நிகழ்ச்சி.மகாராஷ்டிரா மாநிலத்திலும்,ஆந்த்ராவிலும் நிறையப் பேர் சாவைத் தழுவிட்டங்க.அந்த பாதிப்பில் எழுதியது .வருகைக்கு நன்றிங்க radhakrishnan சார் ..

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  7. யாழ் மஞ்சு அவர்களுக்கு என் வணக்கம்.வருகைக்கும் நன்றி. தாங்கள் கூறியபடி பதிவுகளை இனி இணைக்கிறேன் .மிக நல்ல முயற்சி.என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு