வெள்ளி, 17 டிசம்பர், 2010

வாழ்க்கைக் கோலங்கள் ..புள்ளி .3.

வாழ்க்கைக் கோலங்கள் ..புள்ளி .3.


உழைப்பின் உயர்வில் ...பன்முக ஆற்றல் .. 

        இந்தக் கதையின் கதா நாயகர்கள் வசந்தன் ஒப்பந்தக்காரர் ( Contractor ) ஆகவும், முகுந்தன் ஒரு செயற் பொறியாளராகவும் ( Executive Engineer ) தத்தம் துறையில் வளர்ச்சி அடைந்தனர். திருமணமும் ஆகி "நாம் இருவர், நமக்கிருவர், என்று அவர்களின் காலச் சக்கரம்சுழன்றது.

கோடைத் திருவிழாவிற்கு, மனைவி க்களுடன் தாம் பிறந்த ஊருக்கு வந்திருந்தனர்.வழக்கம் போல்,ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்களைச் சந்தித்தனர். வயது முதிர்வால் ஆசிரியர், உடலளவில் மிகவும் தளர்ந்து போய் இருந்தார். இருவரின் வளர்ச்சி பற்றியும் கேட்டு பெருமிதம் அடைந்தார். மேலும் சில வாழ்வியலுக்கு, தேவையான சில உத்திகளைக் கூறினார் .




அவரவர் தம் தொழில் திறமை தவிர, அவர்கள் பணியை மேம்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளவோ அல்லது இத்தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் திறமையுள்ள பணியாளர்களை (Multi-Tasking) தேர்வு செய்யுமாறு, யோசனை சொன்னார். வசந்தனுக்கு ஒப்பந்தம், வரவு சிலவு கணக்கு கடிதப் பரிமாற்றம், அரசாங்க அலுவல் தொடர்பு,வங்கிப் பணிகளில் ஏற்படும் சிக்கல்களைச் சுட்டிக் காட்டி,சரியான தேர்வு மூலம் தம் குறைகளை ஈடுகட்டலாம் என்றார்.

முகுந்தனின் வேலைப் பளுவை சுட்டிக் காட்டி பொறுப்புகளை பகிர்ந்தளித்தல் ( Decentralization ) புதிதாய் தொழிலில் நவீன உத்திகளைப் படித்தோர், உதவிகள் பெற்று சிறப்பாய் பணிபுரிய யோசனை கூறினார். "பக்க வாத்தியங்கள் சிறப்பாய் இருந்தால் ,கச்சேரி மேலும் களை கட்டும்",என்றார்.

வசந்தன், முகுந்தன் ஆகியோருக்கு "அஷ்டாவதானி, தசாவதானி",என்ற பன்முக ஆற்றல் கொண்டோர் பற்றியும் விளக்கமாய் எடுத்துரைத்தார். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியுமென்றாலும்,"ஆசானாகிய தான், நினைவு படுத்தல் கடமை", என்றார், மென்மையாக.

தாள் பணிந்து, ஆசிபெற்று, வணக்கம் கூறி விடை பெற்றனர், மாணாக்கர் இருவரும்.

2 கருத்துகள்: