வியாழன், 2 டிசம்பர், 2010

பகிராத பகிர்வுகள் ..

பகிராத பகிர்வுகள் ..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அள்ள அள்ளக் குறையா, 
அறிவுக் களஞ்சியம்.
மின்னல் போல் வரும்,    
மின்னஞ்சலாய்  மடல்.  
இறை முதல் இரை தேடும்,
இணையதளம்.
யாவும் தேடு களம்.  
 
வலைஎனும் விளக்கில், 
விட்டில் பூச்சியாய்.
மென்பொருள் பின்னலில், 
மீள இயலா வண்டாய்.
மவுஸ் கிளிக்கின் இடையே
மவுன நொடிகள், யுகங்களாய்.
 
வலைத் தளம் கண்ணுற, 
விழித்திமை காக்கும் நேரம், 
விளி முடியா தூரம் போலும்.
விழித்திருந்து, விடிய விடிய
பிழை   திருத்தி, பகிர்வதற்கு  
எழுதியதை, ஏற்றும் முன்னர், 
எல்லாமே மறைந்த மாயம்.
தட்டுத் தடுமாறி 
தவறிய, என்  கை சொடுக்கால்.
 
( எழுதி முடித்த பகிர்வை பிரசுரிக்கும் முன், என்  தவறான கணினி  இயக்கத்தால் இழந்த வருத்தத்தில்  எழுதியது...) 
 
 
                 

6 கருத்துகள்:

  1. இன்னும் சிறிது எளிமையாக இருந்திருக்கலாமோ.?

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. முழு மனதோடு ஒத்துக் கொள்கிறேன்.முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. I AM NOT ABLE TO ASCESS YOUR BLOG DIRECTLY. I AM ABLE TO VIEW YOUR WRITINGS ONLY AFTER I GO TO MY DASHBOARD AND THEN ONLY AM ABLE TO READ YOUR BLOG. THE BLOG I TRIED DIRECTLYIS
    http://senpagadasan.blogspot.com I do not know where is the problem Neither internet explorer or mozilla firefox give the result. they say the blog is not found.

    பதிலளிநீக்கு
  4. Dear Sir,
    Please kindly note the spelling in the blogsite you try to access.It is http://senbagadasan.blogspot.com..an error has crept..its "b" and not "p"..please try and feed me back..I relish your comments and greatly weigh them..regards..my cell no is 7502260660..for your kind info..

    பதிலளிநீக்கு