திங்கள், 6 செப்டம்பர், 2010

சிறகடிக்கும் சிங்கப்பூர்






காலையில் தீயாய் தகித்த சூரியப் புருஷனை,
மாலையில் மடியில் தாலாட்டும் மனைவி மழை,
கீழே மினுமினுக்கும் பல்லாயிரம் மின்னோளியின் கூச்சத்தில்,
நட்சத்திரங்களும் நாணிச் சிணுங்குகிற மேல் வானம்,


அந்தி மஞ்சள் விளக்குகளின் மந்தகாச சிரிப்புகள்..
ஆங்காங்கே மனிதக் கூட்டங்களை விழுங்கியும், உமிழ்ந்தும்,
அனகோண்டாவாய்,அதிவேகமாய் அற்புதமாய், செல்லும் ரயில்கள்,
எலிப் பொந்துகள் போல்,சங்கிலி நிலவறைக்குள், சலிக்காமல்
.

மொபைலில் நர்த்தனமாடும் நாட்டிய விரல்கள்,
மூடிய காதுகளுக்குள் முணுமுணுக்கும் சங்கீதம்,
இங்கே இங்கிதம் தெரியாத இளைய தலைமுறை.
முன் ஒரு கண் மூடி, முகம் மறைக்கும் குட்டிப் பின்னல்கள்,
ரிப்பன்களும்,புடவைகளும் விலை போகாத ஊர்,
ஆடை பஞ்சத்தால், ஆடவர்களை அலைக்கழிக்கும் ஆரணங்குகள்.


இடுங்கிய பார்வை,கோடு விழுந்த கன்னங்கள்,தளர் நடை,
தாழ் தளத்தில் முதியோர்களின் தனி உலகம்.
அருமை அப்பனின் அருகில் வசிக்க,அரசாங்க உதவி.
என்னையா! எச்சில் கூட துப்ப இயலா, துப்புரவான நகரம்.


வருணனும் கருணை காட்டி, மிச்சமிருக்கும் அழுக்குகளை அழிக்கிறான்
பிளாஸ்டிக் பணத்தின் பிரமாத பிரயோகம்.
பணக்காரனுக்கு பணத்தை வாரித் தரும் வங்கிகள்.
வரிசைகள்,வரிகள்,விதிகள் என எல்லாம்,ஒரு ஒழுங்கு மயம்.


தவறியும்,தப்பேதும் செய்திடலை,தடுத்திடும்,தற்காப்பு காமிராக்கள்.
குற்றம் அதிகம் இல்லா கொற்றவனின் நாடு .
சிங்காரத்துக்கும் சிகை அலங்காரம் செய்யும் சிங்கப்பூர்,
விண்ணை விஞ்சும்  விஞ்ஞான வளர்ச்சி.
அடுத்த நூற்றாண்டை தொட, ஓர் அவசரப் பயணம்.


ஓட்டம்,நடை, ஓய்வில்லா உழைப்பு,  இது ஓர் ஒய்யாரச் சீமை,
இந்த ஒய்யாரச் சீமையில் ஓடிக் களைத்த ஓர் கூட்டம்......


 இன்னமும் உதிரும்........

1 கருத்து:

  1. மெய்தான். ஆனால் அந்த ஒழுங்கு முறையான வாழ்க்கை முறை ஒரு பாதுகாப்பு என்பதை மறுக்க இயலாது

    பதிலளிநீக்கு