புதன், 8 செப்டம்பர், 2010

முத்தும் தத்தும்....

அலை கடலில் சிப்பியொன்று,

எப்போதோ விழும் மழைத் துளிக்காக,

காத்திருக்கிறது.

அபலைக் குழந்தை ஆசிரமத்தில்,

அன்பு ஸ்பரிசத்திற்காக,

எப்போதும்,

காத்திருக்கிறது.

ஒன்று முத்தாகிறது.

மற்றது தத்தாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக