செவ்வாய், 7 செப்டம்பர், 2010

திரை கடலோடி திரவியம் தேடி ....

பயணம் முடிந்து, படி ஏறி, பங்க்கரில் படுக்கிறான்,
பாழும் மனது தேய்ந்து போன ஒலி நாடாவாய்,
அவசரமாய் விழுங்கி, அப்புறமாய், அசை போடும் பசு போல,
அகலாத நினைவுகள், மூடாத இமைகள், இரக்கமில்லா இரவுகள்,
 நினைவு  நெருப்பாய், நிலவு சுடுகிறது, கனவு கருகளைகிறது.
நீண்ட இரவுகளில், இவன் உறங்காமலே கிறங்கிப் போனான்.

                (  தாய் மண்ணில் இவனுக்காக )

மாலை சூடும் மணாளனை எதிர் நோக்கிய தன்னுயிர் தங்கை,
கண்களில் டாக்டர் ஆகும் கனவுகளுடன் பள்ளி செல்லும் பாலகன் தம்பி,
இவன் பிரிவின் துயரில்,மூலையில் மூக்கை சிந்தியழும் பாட்டி,
ஈன்றவளின் கண்களில், எப்போதும், வற்றாத இமையோர ஆறு,
பணம்,பலம், ஏதுமின்றி தடுமாறும், தள்ளாத வயது.தந்தை.
இப் பாரங்களின் பளு தாங்காமல், பறந்து பரதேசம் வந்தவன் .

குட்டிகள் போடும், பல வட்டிக்கு கடன் வாங்கி,முதலை விழுங்கும்,
தரகர்களின் அசுரப் பிடியில், இவன் நிலை, அண்டாவில் மாட்டிய தலை,
மூக்காணங் கயிறு கட்டி, முண்ட இயலாமல் தவிக்கும் காளை....


( இன்னுமொரு இதழ் விழும் நாளை ..... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக