புதன், 29 செப்டம்பர், 2010

மலராத மொக்குகள் ....

மலராத மொக்குகள் ....
பல சமயம் பயணங்களின் போதும்,
பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பின் போதும்,
தனியனாய் மோனத் தவத்திலிருக்கும் போதும்,
தடம் புரண்ட ரயிலாய், தாறு மாறாய்,  
எண்ணற்ற எண்ண அலைகள் என்னை ஆட்டுவிக்கும்.
கணக்கற்ற கற்பனை ஊற்றுக்கள் கண்களை திறக்கும்.
கருவிலே உருவாகி பின் கலைந்து போகும் என் சிசுக்கள்.
முழுமையே அடையாத என் சிப்பியின் முத்துக்கள்.
கணத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழிகள்.
ஓட்டை உடைத்து வரப் பயந்த என் பிஞ்சுக் குஞ்சுகள்,
புதை மணலில் சிக்கி மறையும் என் புதிய பிறவிகள். 
ஊட்டி வளர்த்து, பின், உலவ விடப்படாத என் உயிரோட்டங்கள்.
 
இலக்கும், இலக்கணமும் இல்லாத, என் இதயத் துடிப்புகள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக