திங்கள், 6 செப்டம்பர், 2010

அக்கரைச் சீமையிலே

ஒய்யார சீமையில் ஓடிக் களைத்த ஓர் கூட்டம் ,
ஞாயிறு மாலை களை கட்டும் திருவிழா.கடை கட்டும்.
நலிந்த முகங்களில் நண்பர்களை பார்த்த முறுவல்.
பிரிந்த உறவுகளின் பகிர்வுக்கான பரதேச சங்கமம்.

உடல் பிழிந்து ,உருக்கி ,ஊருக்கு அனுப்பும் வெள்ளி,
இந்த வெள்ளிக்காக விடியலை தொலைத்தவர்கள்.
ஏற்றங்கள்,  ஏமாற்றங்கள்,  கண்ணீர், கவலை,
கால் கடுக்க பேச்சு,கூட்டம் கூட்டமாய்,காகம் போல்.

கடல் அலையாய்,தண்ணியடித்து ,தாகம் தீர்த்து,
ஆசை ஆசையாய் தோசை விழுங்கி,
அரிசியும் ,காய் கறியும் அவசரமாய் வாங்கி,
வரும் வாரம், வருவோம்,என விடை கூறி,
பின்னிரவில்,பேருந்தில் கூடு நோக்கி தொலை தூர பயணம்.
 
 
இன்னும் இந்த பயணம் தொடரும்................

2 கருத்துகள்: