செவ்வாய், 5 அக்டோபர், 2010

முஷ்டாகின் பதில்கள் .1..

முஷ்டாகின் பதில்கள்   .1.
                                                    முஷ்டாகின் கஷ்டம் என்ற என்
கடிதத்தை படித்து டாக்டர். கார்த்திகேயன் அவர்கள் எனக்கு
மறு மொழி இட்டதை, இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கிறேன்.
1999 ம் ஆண்டு ,  சவுதியில் ஷருராஎன்னுமிடத்தில் சந்தித்தோம்.
ஒரு நாணயத்தின் மறு பக்கத்தை பார்க்கவும்,சதா
துன்பங்களையே நினைத்திராமல்,அடைந்த வெற்றிகளையும் ,
கடந்த நிலைகளையும் பற்றி, மகிழ்சியுடன் பார்க்க சொல்லி அறிவுறுத்திய  மடல்.
         என் கேள்விக்கென்ன பதில்.... என முஷ்டாக்குடன்  மானசீகமாய் உரையாடி ,அவர் எனக்கு பெற்று தந்த விடைகள் ..
என் கேள்வி  :
திரு.முஷ்டாக் அவர்களே ,இக் கடிதம் பற்றி தங்கள் கருத்தென்ன ?.
திரு.முஷ்டாக் :
ஒன்றுமில்லை எந்தனுக்கு ஈரேழாண்டு முந்தையில்,
அன்று இல்லை உடுப்பதற்கு, மக்களெல்லாம் கந்தையில்.
இன்று இல்லை, கஷ்டமில்லை, கவலையில்லை சிந்தையில்.
என்றுமில்லை, துன்பமில்லை, வாழ்க்கையென்னும்  சந்தையில்.
என் கேள்வி :
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானில் உங்களுக்கு என்ன கஷ்டம் ?.
திரு.முஷ்டாக் :
துன்பம் கண்டேன். துயரம்  கண்டேன். துடைக்கும் வழி அறிந்திலேன்.
துணைவி கண்ணில்  நீரைக்கண்டும் துடைக்கும் வழி தெரிந்திலேன் .
துள்ளும் மக்கள் கல்வி கற்க ,கொள்ளைப் பணம் தேவையாம்,
வெள்ளைப் பணம் சேகரிக்க, தத்தளித்து தவித்திட்டேன்.
                 
                     ( வினாவும் விடையும் இன்னமும் தொடரும் ...)
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக