சனி, 9 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .1.

காத்திருக்கிறாள் ....
 
கண் நிறைந்த நாயகன்
கடல் தாண்டி,போன போது,
கண்ணீர்க் குளத்தில்,
கரைந்தது,
மையல்ல.மனம்.
 
கடனெல்லாம்,
காரணம் காட்டி,
விநாடிகளை, 
வருடங்களாய் ஆக்கி,
எதிர்காலம் வெளிச்சமாய் ,
நிகழ் காலம் இருட்டாய்,
சொல்லிய சமாதானமெல்லாம்,
மறந்து போய்,மறத்துப் போய்,
மரமாய் நிற்கிறேன் நான்.
 
(  சில வருடங்களுக்கு முன்,என் மகள் திருமதி. ஆஷா வெங்கட்ராமன் அவர்கள் எழுதி,
என்னுடன் பகிர்ந்து கொண்டது.இன்னமும் உதிரும் ..   )                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக