ஞாயிறு, 10 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .3.

காலையில் பிடித்தது நாட்காட்டி தான்,
காத்திருக்கும்  நாள் குறைந்ததே.
மாலையில் பிடிக்காததும் அதுதான்.
மாறாமல் இருக்கிறதே.

தன்னையறியாமல் கதவிற்கிழுக்கும்,
தபால்காரரின் மணியோசை.
மாதம் முழுதும் தவமிருந்து,
மணியாய் வரும், ஒருநாள் மடல்.

பிரிக்கும் போது,பரிதவிக்கும்.
மனம் பரபரக்கும்.
கையெழுத்து காணும் போது,
குபுக்கென்று, கண்ணீர்  கொப்பளிக்கும் ...
கை பிடித்ததும், நகம் கடித்ததும்,
கால் நெட்டிஎடுத்ததும்,
தலை துவட்டியதும் ,
எல்லாம் சேர்ந்து, முட்டி மோதும்.

இன்று கோவிலுண்டு ,
காலற நடையுண்டு.என்னவனோடு
தொலை பேசியில் பேச,
திரும்ப திரும்ப ஒத்திகையுண்டு.

மணியடித்ததும் ,மெல்லிதாய் ,
கடிதம் கிடைத்ததா? என்றவுடன் .
சொல்ல வந்தது சொல்லாமலே,
மௌனம் மட்டும் காதல் பேசும் ....                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக