ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

பாரமும் பல சுமையும் ஏற்றி ,
பிஞ்சிலே கூன் விழுந்த நெஞ்சு .
பிழைப்பை தேடிய பொழுது, இழந்ததோ,
பள்ளிப்படிப்பு. எந்தையும் யாயும் இழந்து,
எடுப்பார் கைப் பிள்ளையாய்,
ஏவல்கள் சுமந்தேன்.
ஏறிய சுமைகளின் பாரத்தில்,
இடுப்பொடிந்து போனேன்.

கண்களில் கனவுகளே இல்லை.
கனவென்றால் தெரியா அளவுக்கு கவலைகள்.
கனவு காணும் நேரம் கூட,
உழைக்கவேண்டிய அளவு தேவைகள்.
மூச்சு முட்ட கடன் வாங்கி, பெட்டி கட்டி ,
கப்பலேறி ,கடல் தாண்டி,முழுதுமாய்,
வட்டி கட்டவே இயலாமல், நான்
வடிக்கின்ற கண்ணீர்.

வாழ்க்கை எனும் ஊழிப் பெருவெள்ளத்தில்,
உருட்டி விடப்பட்டேன்.வழி தெரியாமல்
திக்கு முக்காடியபோது ,
திசை காட்டியவள்.நீயே !.
வாழ்க்கையை கரையேற்ற வந்த,என்
கலங்கரை விளக்கே !. 
காயமான என் மனதிற்கு,  மயிலிறகால்
தடவிய சுகமே. உன் வார்த்தைகள் தானடி.

என் நிலவே நீ என்னை சுடாதே.....

( இன்னும் கொஞ்சம் சுடும் .....)                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக