சனி, 16 அக்டோபர், 2010

நண்பர்க்கு கடிதம் .2.

நண்பர்க்கு கடிதம் .2.

எல்லையில்லா பாலையில்,
எல்லாம் இழந்தது,
என் மனம்.
எப்போது பெய்யும்?.
எங்ஙனம் பெய்யும்?.

உன் கடித மழை.
கருவாகி உருவாகி ,
கனத்து பொழிய வேண்டும் .
அரபிக் கடலில் சீசாவில்,நான்
அன்று இட்ட சேதி ,
இன்னுமே சேரலையா?.

அதிவேகமான கிழக்கத்தி,
காத்தில் கிசுகிசுத்தேனே ,
காதில் இன்னும் கேக்கலையா?.
தந்திக் கம்பங்களில் சங்கேதமாய்  ,
கல்லால் தட்டினேனே .
தங்கள் இதயத்தில் இன்னிசையை,
இன்னமும் மீட்டலையா?.

தத்தித் சென்ற இலைகள்,கடலில்
தவழ்ந்து வந்து சொல்லலையா?.
கொட்டும் மழையில்,
விழும் ஒரு துளிக்காக,
காத்திருக்கும் சிப்பியாய்.இன்னமும் நான் ....              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக