புதன், 6 அக்டோபர், 2010

முஷ்டாகின் முடிவான பதில் ...

முஷ்டாகின் முடிவான பதில் ...

என் கேள்வி : சவுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்திருக்க வேண்டுமா ?உங்கள் எதிர் காலம் எப்படிப்  போகும் ?.

திரு முஷ்டாக் :
கட்டைதனை எரித்திடாமல், சொர்க்கம் காண முடியுமா ?
மட்டைதனை உரித்திடாமல், தேங்காய் காண முடியுமா ?
குட்டைதனை குழப்பிடாமல், மீன் பிடிக்க முடியுமா?
முட்டைதனை உடைத்திடாமல் ,ஆம்லேட் போட முடியுமா?

கல்லை போல மகனிருக்கான் ,கவலையில்லை தனக்குத்தான்.
நெல்லை தாரேன்,பணமும் தாரேன் ,நிதமும் தாரேன்,உனக்குத்தான்.
சொல்லை தந்தேன்.என்று சொன்னான் .மனமும் போடுது கணககுத் தான்.
பல்லை காட்ட தேவையில்லை .ஏது குறை எனக்குத்தான்.

பணம் காய்ச்சி மரமென்று, சுற்றத்தார் எண்ணவில்லை,
குணம் மாய்க்கும்,பணம் மீது உற்றாரின் எண்ணமில்லை.
மணம்வாய்ந்த, என் உணவை சற்றேனும் உண்ணவில்லை.
மனம் தோய்ந்த அன்புண்டு , மற்றேதும் திண்ணமில்லை.

                                                                                                                                                                                வீட்டிற்கு போகச் சொன்னது, 'முஷ்டாகின் கஷ்டம் இல்லை,
அவரின் அதிர்ஷ்டமே',என  நண்பர் கார்த்திகேயன் அவர்கள் எழுதிய மடல் இது.அவருக்கு என் நன்றி.அயல் நாட்டில் பாடுபட்ட குறிக்கோள்
நிறைவேற, இழந்த சிலதும், கொடுத்த விலையும்,வாழ்க்கையில்  
வருத்தப்பட வேண்டிய அங்கமில்லை ...

                                   ....குறிக்கோளை எட்டி இருந்தால்   ....     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக