செவ்வாய், 12 அக்டோபர், 2010

வணக்கம் .2.

முகம் தெரியா இந்தியனுக்கு,
முகவரி தரும் விழா.மராட்டியத்தில்.
இருந்தானா ? இறந்தானா? என்று தெரியாத,
இந்தியனுக்கு, இன்று ஆதார். (AADHAAR).
இதுவே, இவன் வாழ்க்கைக்கு, இனி ஆதாரம்.
இன்றைக்கு, இவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.

பஞ்சம் பிழைப்பவனிடமும் லஞ்சம்,
மிஞ்சும் பணமோ மிக மிக கொஞ்சம்.
வஞ்சிக்கப்படலும், வழங்கப் படாதலும்,
எஞ்சிய  நாட்களில் மிஞ்ச,இந்த  ஆதாரம்.
ஜீவாதாரம்.

உள்ளுரிலேயே ,
உருவமின்றி அருபமாய்,
உலவும் அபலைக்கு,
உலகை மீட்டுத் தரும்,
நந்தன் நிலேக்கேனிக்கு,
நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.
நன்றி நிறைந்த, வணக்கங்கள்.

( ஒரு நகர்புற கிராமத்தானின்,
 நாள் கடந்த நன்றி நவிலல்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக