செவ்வாய், 19 அக்டோபர், 2010

காலத்தை வென்ற கதை ...

காலத்தை வென்ற  கதை ...

     T.T.L.Gam என்பவரின் வாழ்க்கையை பற்றிய கதை, இது.
இவர் உலகின் மிகப்பெரும் பணக்காரரில்ஒருவர். பில் கேட்ஸ்,
அம்பானி ,மித்தல் தர வரிசையை, கிட்ட தட்ட தொட்டவர்.
உலகெங்கும், பல தொழில் மையங்களுக்கு அதிபர். சமீப 
காலமாய், அவர் தன் சொந்த ஜெட் விமானத்தை தொடுவதில்லை.
அதுக்கு பதிலா, டெலி போர்டிங் ( Teleporting ) சேவையை பயன் 
படுத்துறார்.பிரேத்யேகமான கண்ணாடி கூண்டுக்குள்ளே நின்னுகிட்டு 
ஒரு விசையை அமுக்கினா, அடுத்த நொடியிலே ஆஸ்த்ரேலியாவுக்கோ,
அமெரிக்காவுக்கோ, நினைத்த இடத்திற்கு சென்று விடுவார்.

             
இது என்னன்னு கேட்டிங்கன்னா "ஸ்டார் ட்ரேக்" ஆங்கில 
சீரியல் பாத்தவுங்களுக்கு,ஒடனே  புரியும். எல்லாம் நம்ம ஊர் 
சமாச்சாரம்தான். நம்ம சித்தர்கள் செய்தது தான். இப்பவும் கூட
இப்படி சம்பவம், நம்ம திருவண்ணாமலையில் நடந்ததாய் யு டூயுப்
( You Tube ) லே போட்டு காமிக்கிராங்கோ. இதனாலே,  நிமிடத்திற்கு 
மில்லியன் டாலர் பண்ற அவருக்கு, ஏகப்பட்ட நேரம் மிச்சம்.


                                   அப்புறம் நம்ம ஆளு, மனித ஆற்றலை சிறப்பா உபயோகிக்கணும்னு கூகுள் கூட ஒப்பந்தம் போட்டு, டிரைவர்
 இல்லாம ஓடுற  பிரயுஸ் காரை  வாங்கிப்போட்டு, எல்லா 
டிரைவரையும் பெரிய வேலைக்கு அனுப்பிட்டாரு.
நம்ப மாட்டிங்க!

இந்த டிரைவர்  ஒட்டாத டெக்னிக்கு, எங்க அய்யா  காலத்திலேயே 
வந்திடுச்சி.செம்மங்குடி என்ற கிராமத்தில் எங்களுக்கு  கொஞ்சம்
நெலம்.நெறைய வைக்கோல். அங்கேயிருந்து 15 கி. மீ. தூரத்திலே உள்ள கும்பகோணம் முனிசிபாலிடிக்கு, வைக்கோல் சப்ளை  பண்ற 
வேலை,எங்க அய்யா  எடுத்திருந்தாங்க.
  
வண்டிக்காரர், இரவில்  பார வண்டியில், வைக்கோல் பொதிகளை ஏற்றி ,
மாடுகளை அதட்டிவிட்டு ,மூக்கணையில் படுத்து உறங்குவார். பாயிண்ட்
டூ பாயிண்ட் பஸ் மாதிரி, மாடுகள் வழக்கமான டீக்கடையில் நிக்கும்.
டீ குடிச்சிட்டு, திரும்ப அதட்டினா,முனிசிபாலிட்டியில் நிக்குமுங்கோ.
அங்கே இருந்து, வைக்கோல் இறக்கிய பிறகு, குப்பைகுழியில் உள்ள உரக் கழிவை வண்டியில் ஏற்றி, அதட்டி விட்டு படுத்தால்,வண்டி  ஊர் வந்து
 சேர்ந்துடும்.நம்புங்க....
அப்பாலே இதே ஆளு, T.T.L.Gam  ,கணினி வேலைக்கெல்லாம் 'சர்வரை'
உபயோகிக்காம 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் முதலாளியை  உபயோகிச்சாருனா, எவ்வளவு பணக் கொழுப்பு பாருங்க.
                இன்னும் ஒரு படி மேலே போய் க்லவூட் கம்புடிங் ( Cloud Computing
பண்றேன்னு பேர்வழி, ஆபிசை எல்லாம் ஊட்டிக்கு  மேல ரொம்ப  ஒசரமான 
இடத்திற்கு மாத்திட்டாரு. அங்கேதான் நெறைய மேகம் இருக்குமின்னு.

   இப்படி தனி ஆளாவே எல்லாத்திலயும் செயிச்சவரு, எவ்வளவோ
பாடு பட்டும், ஒன்னே ஒன்னுலே மட்டும்,  தோத்திட்டாரு. அதாங்க
" ஊழல் ஒழிக்கிற இயந்திரம்" பண்ணப் போயி. இப்ப நம்ம எல்லாரையும்
ஒத்தாசைக்கு கூப்பிடறாரு.உதவறது நம்ம கடமை. இல்லையா?. யோசிங்க.
தயங்காதிங்க!
            
          இன்னம் கதை கதையாய் சொல்லலாமுங்க.அடிக்க வருவிங்க. 
அதனாலே, இத்தோட நிறுத்திக்கிறேன். அப்பறமா பாக்கலாம்... .ஆ...
மறந்திட்டேனே. இதெல்லாம் நம்ம தஞ்சாவூர் தர்மலிங்கம் கதை தானுங்கோ..

(பின் குறிப்பு :- சம்பவம் எல்லாம் உண்மை.
பெயர்தான் மாற்றப்பட்டுள்ளது)                                                                   ,

2 கருத்துகள்: