ஞாயிறு, 10 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .4...

வருட இறுதியில்,
வசந்தம் வந்தது .
வந்தது. என்னுயிர்
நிற்பதும் நடப்பதும் ,
நினைவில்லை.
நிசமா?.  கனவா?.
தெரியவில்லை.

வாங்கி வந்த சேலை கட்டி,
ஆரம் அணிந்தபோது,
கணவனின் கள்ளப் புன்னகை.
லேசானது நெஞ்சம்.
விடியும்போதேல்லாம் நாட்கள் ,
கணக்கெடுத்து கனக்கும்.

வருடமொன்று குறைந்ததென,
என்னை  நானே ஒப்புக்குத் தேற்றி ,
கரை புரளும் கண்ணீரை அணை போட்டு,
விழியால், விடை கொடுக்கும் போது,
இன்னுமொரு, வருடமென்றான்.
மடை திறந்த வெள்ளமாய்,
மறுபடியும் நான் .......

காத்திருக்கிறேன் ......

3 கருத்துகள்:

  1. அழகு.

    நடையில் யாரிடமும் காணத வித்தியாசத்தினை உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. முன் படம் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. வலைப்பூவிற்கு தமிழில் தொடுவானம் என அழகாக பெயர் வைத்துவி்ட்டு அதை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றீர்கள்,.

    முடிந்தால் மாற்றவும். பெயரையும் படத்தையும்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துரைக்கு மிக மிக நன்றி.தலைப்பை தமிழில் மாற்றி விட்டேன்.விரைவில் படத்தையும் மாற்றிவிடுகிறேன்.

    அன்புடன்

    பதிலளிநீக்கு